Pages

Sunday, February 15, 2015

காணிக்கை


13.02.2015  அன்று   என்னை  அலைபேசியில்  ஒருவர்  அழைத்து,  நான்   புதுகை CTN  முத்து,  பவித்ரா  வீடியோ  கவரேஜ்  வைத்துள்ளேன்,  உங்களை  நேரில்  சந்திக்கவேண்டும்  என்றார்.

அலுவலகத்திற்கு  வரவழைத்தேன்.   வந்தவர்  மீண்டும்  தன்னை  அறிமுகப்படுத்திக்  கொண்டு,  கடந்த  மூன்று  ஆண்டுகளாக  என்னை  ஆண்டுவிழா  மேடைகளில்  புகைப்படம்  எடுத்ததாகவும்,  என்னுடையப்  பேச்சு  அவரை  மிகவும்  கவர்ந்ததாகவும்  சொல்லி  மகிழ்ந்தார்.

அன்பாகப்  பேசி  எல்லோரையும்  மகிழ்விக்கும்  உங்களுக்கு,  போட்டோகிராபராகிய  என் அன்பு பரிசு  இது  என்று  தந்தார்.   பிரித்துப் பார்த்தால்......வாவ்....அழகு ஜெயா! (மேலே  உள்ள  படம்தான் )

மேடையில்  இல்லாத,  மைக்  பிடிக்காத,  பரிசுகள்  வழங்காத.... வெறும்  ஜெயா....அம்மா  ஜெயா....சூப்பர்!  எல்லையில்லா  மகிழ்ச்சியில்  அந்த  தம்பிக்கு  என்  நன்றிகளைக்  காணிக்கையாக்கினேன்.

நான்  இந்த  உலகை  விட்டுப்  போன பிறகு,  இந்தப்  படத்தை  வைத்துதான்  எனக்கு  மாலை   போட  வேண்டும்  என்று  என்  மகன்களிடம்  கேட்டுக்கொள்ள  வேண்டும் !   அவ்வளவு  புடிச்சிருக்கு.......!

Sunday, February 8, 2015

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான்.......அனுபவம்

    இன்று  (25.01.2015)  நடந்த  வீதி  இலக்கியக்  கூட்டத்தில்  கவிஞர்  வைகறை  அவர்கள்  தன்னுடைய  ஜன்னல்  திறந்தவன்  எட்டிப்பார்க்கப்படுகிறான்...கவிதைத்  தொகுப்பை  அன்போடு  வழங்கினார்.

    கூட்டம்  முடிந்து  பேருந்தில்  பயணிக்கும்போதே  படிக்க  ஆரம்பித்து  விட்டேன்.  குழந்தைகளோடே  பழகுபவள்,  குழந்தையாகவே  இருக்க  விரும்புபவள்...   இது  போதாதா   எனக்கு  ஜெய்குட்டியோடு  குதூகலிக்க....!

       பறவை  வரைய  நினைத்தவன்
       வரைய  மறுக்கிறான்
      கோடு  போட்ட  காகிதத்தில்....

பறவைய  சுதந்திரமா  பறக்கவிட  வேண்டாமா?  அதென்ன  கோடு  போட்டப்  பேப்பர்ல  பறக்கவிடுறது...ஜெய்குட்டியின்  பிடிவாதத்தை  ரொம்பவும்  ரசித்தேன்.

      அரிசி  கொத்தும்  காகம்
     விரட்ட  வந்த  ஜெய்குட்டி
     தாமதிக்கிறான்   கொஞ்சம்

நியாயம்தானே..பொம்மைக்கு  சோறு  ஊட்டுற   குழந்தையால  எப்புடி  காக்காவ  விரட்டமுடியும்?  அழகு  குழந்தைத்தனம்.

ஐ  மூனு  கிளி!-----யில்  கவிஞருக்கே  உரிய  தற்குறிப்பேற்றம்,

கிழித்துவிடலாம்---தலைப்பில்  பாரதியின்  நினைவு  நாளை  எப்படியோ(தொலைக்காட்சி  வாயிலாக)  வருகிற/ வளர்கிற  தலைமுறை  அறிந்து கொள்வதில்  உண்டாகும்  மகிழ்ச்சி.  இப்படி  அனைத்து  கவிதையிலும்  கவிஞரின்  உழைப்பு  உன்னதமடைகிறது.

உங்கள்  கவிதை  ஜன்னலைத்  திறந்து  எட்டிப்பார்த்ததில்,  என்  குழந்தைப்  பருவம்  நிழலாடியது.  என்  குழந்தைப் பருவத்தில்  நான்  தக்கவைத்துக்  கொண்டவைகள்,  தவறவிட்டவைகளைக்  காட்டிலும்  அதிகமானவைதான்  என்பதையும்  உணர்ந்து  மகிழ்ந்தேன்.  கவிஞர்  வைகறை  அவர்களுக்கு  உளமார்ந்த  நன்றிகளும்  வாழ்த்துகளும்!

Friday, February 6, 2015

இருக்கை

    25  வருடங்கள்   பேருந்தில்   பயணித்துக்  கொண்டிருக்கிறேன்   என் 

பணியின்  பொருட்டு.   நடத்துனர்  இருக்கைக்  காலியாக  இருந்தால்  அவர் 

வரும்  வரை  அதில்  ஓடிப்போய்  உட்கார்ந்துகொள்ளும்  ரகம்தான்  நான்.      ஆனால்   இன்று  நடத்துனரே  அவர்  இருக்கையில்  என்னை  உட்காரச்சொல்லியும்  நான்  மறுத்துவிட்டேன்.  காரணம்  தோழர்  இரா.எட்வின்  அவர்களின்   அருகம்புல்லேயாயினும்.....(அந்தக்  கேள்விக்கு  வயது 98 )   தலைப்பில்  படித்த  அச்சடிக்கப்பட்டப்  புத்தக  வரிகள்தான்.              
    
        அதைப்  படித்தப்  பிறகுதான்   நான்  அலுவலர் ..என்  சீட்டுல  எப்புடி  நான்   யாரையும்  உட்கார  அனுமதிக்க  மாட்டேனோ,  அப்புடித்தானே  அவரோட  சீட்டும்.....இந்த  உண்மையை   உணர்ந்தேன்.  அடடா  எவ்வளவு  மகிழ்ச்சி  தெரியுமா  எனக்கு!   இனி  அரசுப்  பேருந்து  உள்ளவரை,  நடத்துனர்  இருக்கை  இருக்கும் வரை,  நான்  பயணிக்கும்  காலம்வரை   நடத்துனர்  இருக்கையில்  உட்காரவே  மாட்டேன்.   பையப்  பையப்  புரளும்  சமூகம்.....ன்னு   தோழர்   எழுதியிருந்தாரு   இப்ப  புரளுது  தோழர்.
      
நடத்துனர்க்கிட்ட   அது  உங்களோட  சீட்டு,  அதுல  யாருமே  உட்காரக்கூடாது  என்று  நான்  சொன்னவுடனே  என்னைப்  பார்த்து  ஒரு  சிரிப்பு...பூ..சிரிச்சாருப்  பாருங்க......சொல்லமாட்டேன்    அது  சொர்க்கம்.

Wednesday, February 4, 2015

யாவும் சமீபித்திருக்கிறது; நூல் அனுபவம்






நேற்று தோழர் கடங்கநேரியான் அவர்கள் அவருடைய யாவும் சமீபித்திருக்கிறது

கவிதைத் தொகுப்பை அஞ்சலில் அன்போடும், வாழ்த்துக்களோடும்

அனுப்பியிருந்தார்கள். மிக்க நன்றி தோழர்.

நமக்குத்தான் புத்தகம் கிடச்சுட்டா போதுமே உடனே படித்துவிட்டேன். அடடா...மனிதர்

உணர்ந்துகொள்ள இது மனிதக்கவிதை அல்ல, அதையும் தாண்டி புனிதமானது!

மேகங்களைப் பார்க்கும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு உருவம் தெரியும்ல,

அப்புடித்தான் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல் கொடுக்கும். சூப்பர்