Pages

Sunday, February 15, 2015

காணிக்கை


13.02.2015  அன்று   என்னை  அலைபேசியில்  ஒருவர்  அழைத்து,  நான்   புதுகை CTN  முத்து,  பவித்ரா  வீடியோ  கவரேஜ்  வைத்துள்ளேன்,  உங்களை  நேரில்  சந்திக்கவேண்டும்  என்றார்.

அலுவலகத்திற்கு  வரவழைத்தேன்.   வந்தவர்  மீண்டும்  தன்னை  அறிமுகப்படுத்திக்  கொண்டு,  கடந்த  மூன்று  ஆண்டுகளாக  என்னை  ஆண்டுவிழா  மேடைகளில்  புகைப்படம்  எடுத்ததாகவும்,  என்னுடையப்  பேச்சு  அவரை  மிகவும்  கவர்ந்ததாகவும்  சொல்லி  மகிழ்ந்தார்.

அன்பாகப்  பேசி  எல்லோரையும்  மகிழ்விக்கும்  உங்களுக்கு,  போட்டோகிராபராகிய  என் அன்பு பரிசு  இது  என்று  தந்தார்.   பிரித்துப் பார்த்தால்......வாவ்....அழகு ஜெயா! (மேலே  உள்ள  படம்தான் )

மேடையில்  இல்லாத,  மைக்  பிடிக்காத,  பரிசுகள்  வழங்காத.... வெறும்  ஜெயா....அம்மா  ஜெயா....சூப்பர்!  எல்லையில்லா  மகிழ்ச்சியில்  அந்த  தம்பிக்கு  என்  நன்றிகளைக்  காணிக்கையாக்கினேன்.

நான்  இந்த  உலகை  விட்டுப்  போன பிறகு,  இந்தப்  படத்தை  வைத்துதான்  எனக்கு  மாலை   போட  வேண்டும்  என்று  என்  மகன்களிடம்  கேட்டுக்கொள்ள  வேண்டும் !   அவ்வளவு  புடிச்சிருக்கு.......!

9 comments:

  1. வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  2. வணக்கம்
    வாழ்த்துக்கள்...
    நான் இந்த உலகை விட்டுப் போன பிறகு, இந்தப் படத்தை வைத்துதான் எனக்கு மாலை போட வேண்டும்
    இந்தவரிகள் மனதை கனக்கவைத்தது...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். எதார்த்தம்....ஆசையும் கூட

      Delete
  3. இருக்கும் போதே
    எதற்காக, மறைவைப் பற்றி எண்ண வேண்டும் சகோதரியாரே

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அக்கா..
    நல்ல விஷயம் சொல்லி மரணத்தைப் பற்றி எதற்கு சிந்தனை...

    ReplyDelete
  5. அம்மா ,படம் என்னாழகா வந்திருக்கு நாம எதிபார்க்காதது நமக்குக்கிடைக்கும் பொழுது அந்த மகிழ்சிக்கு அளவே இல்லை.

    ReplyDelete