Pages

Thursday, January 1, 2015

கதை நான் ......கருத்து நீங்க !

ஒரு  வாத்தியாரு  கிராமத்துல  இருந்த  விவசாயி  ஒருத்தரப்  பாக்கப் போனாராம். விவசாயிக்கிட்ட  ஒரு விளை நிலமும்,  ஒரு  செக்கும்  இருந்துச்சாம்.  வாத்தியாரு  விவசாயிக்கிட்டப் போய், “எப்புடி இரண்டு  வேலையையும்  ஒரே  ஆளாச்  செய்றீங்க?” அப்புடீன்னு கேட்டாராம்.

”செக்குமாடு  ஒரே  வட்டத்துலதானே சுத்திக்கிட்டு  இருக்கும்.  அது  கழுத்துல  ஒரு மணி  கட்டி இருக்கேன்.  மாடு  நின்னுட்டா  சத்தம்  வராது.  உடனே  நான்  ஹாய்...ஹாய்....ன்னு  குரல்  கொடுப்பேன். மாடு  திரும்பவும் சுத்த  ஆரம்பிக்கும். அதுனால  வயல்  வேலை  செய்யிறதுல  எனக்கு  எந்த  இடையூறும்  வராது”  சொல்லிட்டாரு  விவசாயி.

உடனே  வாத்தியாரு,”மாடு  ஒருவேளை  தலையை  மட்டும்  ஆட்டிக்கிட்டு  சுற்றாமல்  நின்றால்கூடச்  சத்தம்  வருமே....அப்ப  என்னா செய்வீங்க?”  கேட்டுவிட்டார்.  உடனே  விவசாயி  சொன்னாராம்.....”என்  மாடு  அப்புடியெல்லாம்  செய்யாது.  அது  என்ன உங்கள  மாதிரி  ரொம்பவாப்  படிச்சிருக்கு....இப்புடியெல்லாம்  குறுக்குத்தனமா  யோசிக்க?”........

கதை  தமா....ஷா....சொன்னாலும்,   கல்வி  குறுக்குவழியை  உருவாக்க  உதவுதா?  இல்லயா?  உண்மையைச்  சொல்லுங்க...........