Pages

Friday, September 11, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 26 /30

பசித்தவனுக்கு  சோறுதான்   கடவுள் !
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவில்  நீங்கள்  சாப்பிடும்போது  ஒரு  பருக்கை கூட  தவறி  கீழே விழக்கூடாது.  ஏன்  தெரியுமா ?   அந்த  பருக்கை  வயலில்  நெல்லா  முளைச்சப்ப  உதிர்ந்து போயிருக்கலாம்.  ஆனா  அப்படிப் போகல.... களத்துல  கதிர்  அடிக்கும்போது  காத்துல பறந்து  போயிருக்கலாம். அப்படியும்  போகல..... நெல்லு  அவிக்கும்போது  தீஞ்சு  போயிருக்கலாம். அப்புடியும்  போகல...... அரிசியா  தீட்டும்போது  உடைஞ்சு போயிருக்கலாம்.  அப்புடியும்  போகல......வேற  யாராவது  வீட்டுக்குப்  போயிருக்கலாம். அப்புடியும்  போகாம  நம்ம  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  தப்பி  வந்து  அதுலேயும்  உங்க  இலையில  வந்து  உட்காருதுன்னா... அது  உங்களுக்கு  மட்டுமே  ஆன  சோறு  பாஸ் !

ஒரு  பருக்கையே  இவ்வளவு  பயணம்  செஞ்சு  புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  வரும்போது  நீங்கள்   மட்டும்  என்ன  ........வாங்க   சாப்பிடலாம்
     
             அப்பு  கறீஸ்...அசைவம்  ரொம்ப  நல்லாயிருக்கும்

Thursday, September 10, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 27 / 30



மக்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் பாதி அவர்களுடைய வயிற்றை நிரப்புகிறது. மீதிப்பாதி டாக்டர்களின் வயிற்றை நிரப்புகிறது---மருத்துவ அனுபவம் இது ! பாதி அளவு சாப்பிட்டால் உடம்பும் பாழாகாது, மருத்துவரின் தேவையும் இருக்காது.

நீங்கள் கவலையான மனநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், நல்ல உணவுகூட விஷத்தன்மையை ஏற்படுத்திவிடும். அதேசமயம்
நீங்கள் சந்தோஷம் பொங்கும் மனோநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், விஷம்கூட தனது முழு பாதிப்பையும் தராமல் நின்றுபோகும் வாய்ப்புள்ளது----இது சாத்தியமும் சத்தியமும் கூட! சாப்பிடும்போது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்!
உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும் முழுப் பொறுப்பையும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாக்குழுவினர் செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன...நமக்கு சோறு முக்கியம் பாஸ்! சாப்புட வா....ங்...க!

சரவணபவன் கீழ 2 ம்வீதியில சாஸ்தாபவன் அருகில இருக்கு(சைவம்தான்) நிறைய கஷ்டமர்கள் உண்டு.

Wednesday, September 9, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 28 / 30

தினமும்  உதிப்பதாலேயே  சூரியன்  அற்பமானதாகி  விடாது !
தினமும்  சாப்பிடறதால  அது  சாதாரண  செயலாகிவிட முடியாது!

வலைப்பதிவர்  திருவிழாவில்  சாப்பிடுவதற்கு  அன்போடு அழைக்கிறோம்.

இன்னக்கி  அசைவத்துக்குதான்  போறோம்----அதுவும்  இரவு உணவு மட்டும்.

                      முத்துப்பிள்ளை  கேண்டீன்

புதுக்கோட்டையில  பச்சப்புள்ளையக்  கேட்டாக்கூட  பளிச்சின்னு  சொல்லும்.
இந்த  கேண்டீன்  முட்டை மாஸ்  சாப்புடாம  ஊருக்குப் போனா  பாவம் வுடாது.
அவிச்ச  முட்டைய  நறுக்கிப்போட்டு தக்காளி  சேர்த்து ஒரு கிரேவி  (அது ரகசியம் )  ஊத்தி சுடச்சுட  வாழை இலையிலக்  கட்டித்தருவாங்க  பாருங்க.......
ச்சே...இலையக்கூட  திண்ணுப்புடலாம்!

இன்னும் தெரிஞ்சுக்க இங்க சொடுக்குங்க

Tuesday, September 8, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 29

சாப்பிடுவது  வயிற்றை  நிரப்புகிற  செயல்பாடு  மட்டுமல்ல
மற்றவர்களோடு  பகிர்ந்து  கொள்கிற  மனப்பான்மையும்தான்!
சாப்பாட்டோடு  பல  அனுபவங்களையும்  பகிர்ந்து  கொள்ள
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  அன்போடு  அழைக்கிறோம்!

Monday, September 7, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 30

    “ சாப்பிடுவதைச்  சிரத்தையோடும்,  நெறியோடும்  செய்கிறவர்கள்  மற்ற  அனைத்து

செயல்களையுமே  ஒழுங்காகச்  செய்யக்  கற்றுக்  கொள்வார்கள்”

         வாழ்வதற்கு  உண்பவர்கள்  மத்தியில்
         உண்பதற்காக   வாழ்பவர்களை  வரவேற்கிறேன் !

  உணவும்  உணர்வும்--- என்   நாணயத்தின்   இரு  பக்கங்கள் !

       புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவிற்கு  வருகை தரும்  புத்திசாலிகள்  அனைவரும்  பணி  செய்வதற்கும்     செயல்படுத்துவதற்கும்  உணவு முக்கியம்  பாஸ் !