என் வாகனத்தின்
ஒரு கதவைத் திறந்து
உன்னை வரவேற்கையில்
உயிருள்ளவளாகவும்....
அதே கதவைத் திறந்து
உன்னை வழியனுப்புகையில்
உயிரற்றவளாகவும்......
நான்...உன் சாரதி !
கடவுள்கள் இல்லாத உலகில்
சாரதி நான் தான் உன்னை
மோட்சத்திற்கும் நரகத்திற்கும்
இட்டுச் செல்ல வேண்டும்..
ஆனால்
வெறுமனே நிற்கிறேன்
நான்....உன்சாரதி !
ஒரு கதவைத் திறந்து
உன்னை வரவேற்கையில்
உயிருள்ளவளாகவும்....
அதே கதவைத் திறந்து
உன்னை வழியனுப்புகையில்
உயிரற்றவளாகவும்......
நான்...உன் சாரதி !
கடவுள்கள் இல்லாத உலகில்
சாரதி நான் தான் உன்னை
மோட்சத்திற்கும் நரகத்திற்கும்
இட்டுச் செல்ல வேண்டும்..
ஆனால்
வெறுமனே நிற்கிறேன்
நான்....உன்சாரதி !
This comment has been removed by the author.
ReplyDeleteஆஹா வினோதமான சிந்தனைகள் வாழ்த்துகள்.
Deleteநன்றி சகோ. மனதில் பட்டதைச் சொல்லுங்கள்
Deleteஅட! அட! அட! நான் சாரதி என்பதை driving தெரிந்த நீங்க சொல்லும்போது ஒரு புது கலர் கிடைக்குதே!!! சூப்பர் அம்மா !
ReplyDeleteஅழகுக்கலரா..
Deleteஅருமை
ReplyDeleteஅருமை சகோதரியாரே
நன்றி சகோதரருக்கு
Deleteநல்ல சிந்தனையில் வந்த ரசனையுடன் கூடிய கவிதை.
ReplyDeleteஅருமை... அருமை...
ReplyDeleteஉங்கள் வார்த்தைகள் அழகு
Deleteகவிதை நன்றாக இருக்கிறது சகோதரி.
ReplyDeleteஉங்கள் இண்டிகாவில் நீங்களே ஓட்டுநராக இருப்பதைப் பார்த்ததில் ஒரு சிறு குழப்பம்... (ஒருவேளை உங்கள் ஓட்டுநர் விடுப்பில் இருந்தபோது பார்த்திருப்பேனோ?)
வாகனமே சொல்வது போல கற்பனை செய்திருந்தால் இன்னும் அர்த்தம் கூடுதலாகக் கிடைத்திருக்குமோ என யோசிக்கிறேன்.
ஆனாலும் கவிதையும் இந்தக் கற்பனையுமே அழகுதான்.
அன்பு கூர்நது தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள்.
நன்றி அண்ணா. இப்பதான் புரியுது. என் வாகனமே கற்புனை செய்திருக்கலாமே என்று ! என் உணர்வுகளை அப்படியே வடித்துவிட்டேன். நல்ல வழிகாட்டல். தொடர்ந்து வேண்டும்.
Delete